For Daily Alerts
Just In
இலங்கையில் 8 தமிழக மீனவர்கள் கைது
கொழும்பு:
இலங்கை எல்லைப்பகுதியில் கடலில் மீன் பிடித்தது தொடர்பாக 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி:
புதன்கிழமை காலை தலைமன்னார் பகுதியில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் தலைமன்னார் போலீஸாரிடம் அவர்கள்ஒப்படைக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 50 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுஏற்கனவே இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 மாதங்களாக சிறையில் தவித்து வருகின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, June 21, 2001, 5:30 [IST]