மனைவி கொலை: கணவன், நண்பருக்கு ஆயுள்
கோவை:
மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவனுக்கும் அவருடைய நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்துநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். இவரது மனைவி கஸ்தூரி.
செந்தூர் பாண்டியனுக்கு பாலசுப்ரமணியம் என்ற நண்பர் இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 1998ம் ஆண்டுஏப்ரல் மாதம் 15ம் தேதி கஸ்தூரியை அழைத்துக் கொண்டு வடவள்ளி சென்றனர்.
வடவள்ளிப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தனது மனைவியிடம், நண்பனின் ஆசைக்கு இணங்குமாறுசெந்தூர்பாண்டியன் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து செந்தூர்பாண்டியனுக்கும் கஸ்தூரிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறுமுற்றியவுடன், பாலசுப்ரமணியமும் சேர்ந்து சண்டையிட்டுள்ளார்.
இறுதியாக கஸ்தூரி சத்தம்போட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்துகஸ்தூரியைக் கொலை செய்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வடவள்ளிப் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தூர்பாண்டியனையும்பாலசுப்ரமணியத்தையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு கோவை இரண்டாவது கூடுதல் தன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி சண்முகம், நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக செந்தூர்பாண்டியன்,பாலசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.