நக்ஸல் சத்யமூர்த்திக்கு காவல் நீட்டிப்பு
பவானி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் முன்னாள் கூட்டாளி கந்தவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசத்தியமூர்த்தியை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் பர்கூருக்கு அருகேயுள்ள ஈரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனின்நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார்.
வீரப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் வீரப்பனைவிட்டு பிரிந்து சென்றார்.
தன்னைப்பற்றி கந்தவேல் அதிரடிப்படையினருக்கு தகவல் கூறுவதாக சந்தேகப்பட்ட வீரப்பன் 1998ம் ஆண்டுநவம்பர் மாதம் தாளவாடி அருகேயுள்ள முதியனூர் வனப்பகுதியில் கந்தவேலை வீரப்பன் கும்பல் படுகொலைசெய்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மேக்கோ ரங்கசாமி,சந்திராகவுண்டர், கந்தசாமி, மாதேவ், நக்சல் சத்தியமூர்த்தி, தாளவாடியைச் சேர்ந்த காசீம் ஷெரீப் ஆகிய 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குவிசாரணை பவானி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை பவானி நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தியை ஆஜர்படுத்துவதாக இருந்தது.ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனால் அவர் ஆஜராகவில்லை.
எனவே அவரை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications