For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்ஸல் சத்யமூர்த்திக்கு காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

பவானி:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் முன்னாள் கூட்டாளி கந்தவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசத்தியமூர்த்தியை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டம் பர்கூருக்கு அருகேயுள்ள ஈரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனின்நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்தார்.

வீரப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் வீரப்பனைவிட்டு பிரிந்து சென்றார்.

தன்னைப்பற்றி கந்தவேல் அதிரடிப்படையினருக்கு தகவல் கூறுவதாக சந்தேகப்பட்ட வீரப்பன் 1998ம் ஆண்டுநவம்பர் மாதம் தாளவாடி அருகேயுள்ள முதியனூர் வனப்பகுதியில் கந்தவேலை வீரப்பன் கும்பல் படுகொலைசெய்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தனக்கடத்தல் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மேக்கோ ரங்கசாமி,சந்திராகவுண்டர், கந்தசாமி, மாதேவ், நக்சல் சத்தியமூர்த்தி, தாளவாடியைச் சேர்ந்த காசீம் ஷெரீப் ஆகிய 8 பேர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குவிசாரணை பவானி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை பவானி நீதிமன்றத்தில் சத்தியமூர்த்தியை ஆஜர்படுத்துவதாக இருந்தது.ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனால் அவர் ஆஜராகவில்லை.

எனவே அவரை அடுத்தமாதம் 4ம் தேதி ஆஜர்படுத்துமாறு பவானி மாஜிஸ்திரேட் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X