ஜூன் 24 ல் கண்ணதாசன் சிலை திறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவிஞர் கண்ணதாசனின் பவளவிழாவை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான காரைக்குடிக்கு அருகேயுள்ளசிறுகூடற்பட்டியில் அவரது சிலை இந்த மாதம் 24ம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளது.

பல அரிய படைப்புகளை படைத்து புகழ் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம்,இயேசு காவியம் போன்றவை என்றும் மக்கள் நெஞ்சை விட்டு மறையாதவை.

திரையுலகில் அவர் எழதிய பாடல்கள் ரசிகர்கள் மனதில் என்றும் பசுமையாக இருப்பவை. அவரது சொந்த ஊர்காரைக்குடிக்கு அருகில் இருக்கும் சிறூகூடற்பட்டியாகும்.

அங்குள்ள கவிஞர் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்திறப்பு விழாவும், ஊருக்கு மத்தியில்அமைக்கப்பட்டுள்ள கவிஞரின் சிலை திறப்பு விழாவும், கவிஞரின் பவளவிழாவையொட்டி இந்த மாதம் 24ம்தேதி திறந்து வைக்கப்பட உள்ளது.

கவிஞரின் பவளவிழா நிகழ்ச்சிகள் இந்தமாதம் 24ம் தேதி சிறுகூடற்பட்டியில் நடைபெறுகிறது. கண்ணதாசனின்வீட்டில் கண்ணதாசன் கலந்துகொண்ட புகைப்படங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கடிதங்கள், அவர்பயன்படுத்திய. உடைகள், பொருட்கள் இடம் பெறுகின்றன.

சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் சிலை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

புதுக்கோட்டை ராணி சாருபாலா ஆர். தொண்டைமான் குத்துவிளக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம் கண்ணதாசன்வாழ்ந்த வீட்டை திறந்து வைக்கிறார். கவிஞரின் சிலையை இயக்குனர் பாரதிராஜா திறந்து வைக்கிறார்.புதுக்கோட்டை மன்னர் ராஜ ராஜ கோபால தொண்டைமான் பவளவிழா வளைவு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி, திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்டபல திரையுலக பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+