For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கையில் விரக்தி .. 81 வயதில் ஒரு தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வாழ்க்கையில் விரக்தியுற்ற 81 வயது முதியவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றித்தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் வெள்ளைச்சாமி (81). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள்உள்ளனர்.

வெள்ளைச்சாமியை அவரது மகனோ அல்லது மகள்களோ சரியாக கவனிப்பதில்லையாம். சரியாக சாப்பாடு கூடதருவதில்லையாம். மனைவியுடன் கஷ்டப்பட்டு வந்த வெள்ளைச்சாமி வாழ்க்கையில் விரக்தியுற்றார்.

பிள்ளைகள் சரியாக கவனிப்பதில்லை, எதற்காக உயிர் வாழ்கிறோம் என்றே தெரியவில்லை என்று மனம் உடைந்தஅவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் பிள்ளைகள் யாரும் இல்லாத நேரத்தில் உடலில்மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.

தீயில் கருகித் துடித்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார்.

முதியவர் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X