For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வந்தது கல்லணை நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வறண்டுகிடந்த விளைநிலங்கள் உயிர் பெற்றுள்ளன.

பாசனத்திற்காக கல்லணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தண்ணீர்இல்லாமல் வறண்டு கிடந்த விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும்நாகப்பட்டினத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுழற்சி முறையில் 9,000 கன அடிநீர் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனப்பகுதிகளுக்கு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திறந்துவிடப்பட்டது.

தொடர்ந்து 5 நாட்களுக்கு வெண்ணாறு பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதன் பின் இதே அளவுதண்ணீர் 5 நாட்களுக்கு காவேரி பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X