தமாகா செயற்குழு கூட்டத்தில் ஜெ.வுக்கு புகழாரம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் பாராட்டி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேறின.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எம்எல்ஏக்களின் அமோக ஆதரவுடன் தமிழக முதல்வராகப்பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தமாகா தெரிவிப்பதாக ஒரு தீர்மானம் கூறுகிறது.
மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கும் தமாகா நன்றி கூறுவதாக மற்றொரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் செய்வதில் புதிய செய்முறைகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருப்பது, விவசாயிகளுக்கான கடன்வட்டியையும் அபராத வட்டியையும் தள்ளுபடி செய்தது போன்ற அதிமுக அரசின் செயல்களைப் பாராட்டியும் ஒரு தீர்மானம்தமாகா செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்:
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெறவும் கட்சியைப் பலப்படுத்துவதற்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும்என்று தன் கட்சித் தொண்டர்களைத் தமாகா தலைவர் மூப்பனார் கேட்டுக் கொண்டார்.
"கட்சியின் செயல்பாடுகள் யாவும் மிகவும் தொய்வாக உள்ளன. இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்பளிக்க வேண்டும். நாம்வலிமையாக இருந்தால்தான், உள்ளாட்சித் தேர்தலுக்கு நம்மை மதித்து உரிய இடங்களைத் தருவார்கள். அதிமுகவுடன் கூட்டணிதொடர வேண்டும். காங்கிரஸ்-தமாகா இணைப்பெல்லாம் வேண்டாம்" என்று கூட்டத்தில் பேசிய சிலர் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications