For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ரயில் ஆற்றில் விழுந்தது: 50 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலின் 3 பெட்டிகள் கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றில்விழுந்ததில், 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மங்களூரில் இருந்து தினமும் கிளம்பும் இந்த ரயில் கேரளாவின் கோழிக்கோடு வழியாக சென்னை சென்ட்ரலை அடையும்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் மங்களூரை விட்டுக் கிளம்பிய இந்த ரயில், கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றுப் பாலத்தில் வந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அதன் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டுவிழுந்தன. இவற்றில், 3 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன.

இந்த 3 பெட்டிகளில் மட்டும் சுமார் 500 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இந்தவிபத்தில் 50 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இந்தியக்கடற்படையும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X