குடிநீர் பஞ்சத்தை தீர்க்க புதிய தமிழகம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் நிலவிவுவரும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம்கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கட்சி தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம், எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் ஒன்றும்நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications