இறந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்
ஈரோடு:
கோழிக்கோடு ரயில் விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
60 பேர்களைப் பலிகொண்ட மங்களூர்-சென்னை ரயிலில் பல தமிழர்களும் பயணம் செய்தனர். இறந்தவர்களில் 48பேருடைய உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களுடைய விவரம் வருமாறு:
1. ஈரோட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.வி. கங்காதரன்
2. ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் முருகானந்தம்
3. திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியர் ஆர். பால்துரை
ஜவுளி வியாபாரம் சம்பந்தமாக கோழிக்கேடு சென்றிருந்த முருகானந்தம், தன் வேலைகளை முடித்துவிட்டுத்திரும்பும்போதுதான், இந்த ரயில் விபத்தில் அவர் இறந்து போனார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள்உள்ளனர்.
அதேபோல், களக்காடு பால்துரை, பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழைக்காய் வியாபாரம் செய்துவந்தார். வாழைக்காய் விற்பனை செய்தவர்களிடம் பணம் வசூல் செய்வதற்காகப் பையனூருக்குச் சென்றபால்துரை, மங்களூர் ரயிலில் வரும்போதுதான், ரயில் விபத்தில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி, 2மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications