கோழிக்கோடு மருத்துவமனைக்கு ரூ 10 லட்சம் நிதியுதவி
சென்னை:
சென்னை - மங்களூர் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு ரூ 10 லட்சம் சிறப்பு உதவித் தொகை வழங்க மத்திய நிதி அமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை -மங்களூர் ரயில் கேரளாவில் உள்ள ஆற்றில் விபத்துக்குள்ளானது. இதில் 4 பெட்டிகள் ஆற்றுக்குள்விழுந்தன. இதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 260க்கும்அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்துக்கு பகுதியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்த்துஆறுதல் கூறினார்.
அதன் பின் மருத்துவமனையில் மேலும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும், கவன அடிப்படையில் சிகிச்சசை மேற்கொள்ளவும், ரூ 10 லட்சம்சிறப்பு உதவித் தொகை வழங்க அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications