தர்மபுரி அருகே தனியார் பஸ் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
ஊத்தாங்கரை அருகே தனியார் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது.
செங்கத்திலிருந்து திங்களன்று இரவு புறப்பட்ட ஒரு தனியார் பஸ், கிருஷ்ணகிரிக்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது வழியில் 15 பேர் அடங்கிய ஒரு கும்பல், அந்த பஸ் மீது சரமாரியாகக் கல் வீசி, பஸ்சை நிறுத்தியது.
பஸ்ஸை விட்டு இறங்கும் படி கூறி அந்தக் கும்பல் பயணிகளை மிரட்டியது. இதனால் பயணிகளும் உடனேஇறங்கிவிட்டனர்.
அதன் பின், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சிற்குத் தீ வைத்து கொளுத்தி விட்டுத் தப்பி ஓடி விட்டனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார், எதற்காக பஸ்சிற்குத் தீ வைத்தனர் என்பது பற்றி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications