For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி வளர்ப்பு மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் என்ற பெயரில் மன்றம்ஒன்றை நடத்தி வருகிறார்

அந்த மன்றத்தின் தலைமை நிலைய செயலாளர் கோபு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும்,போதை பொருள் வைத்திருந்ததாகவும் சுதாகரன் மீது பல வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல் வழக்கில் தன்னை ஜாமீனில் விடக்கோரி சென்னை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுதாகரன்மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை இரண்டாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் முன்திங்கள்கிழமை விசாராணைக்கு வந்தது.

அப்போது சுதாகரன் சார்பில் வாதாடிய வக்கீல் சரவணகுமார் சுதாகரனால் மிரட்டப்படுவதாக கூறப்படும் கோபுஸ்ரீதர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையைசெவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X