மீண்டும் கட்சியில் இணைய சிதம்பரத்துக்கு காங். அழைப்பு
சென்னை:
காங்கிரஸ் - த.மா.கா. இணைப்பு பற்றி இனி எதுவும் பேசமாட்டேன். காங்கிரசுடன்,த.மா.காவை இணைப்பது பற்றி இனி மூப்பனார்தான் முடிவு செய்ய வேண்டும் எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன் கூறுகையில், திருச்சிக்குஅடுத்தபடியாக சென்னையிலும் எதிர்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இது பற்றிநான் எந்தவிதமான கருத்தும் கூறவிரும்பவில்லை.
காங்கிரசை பலப்படுத்தி உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றிதான் யோசனைசெய்யவுள்ளேன். காங்கிரசுடன், த.மா.கா. இணைவது பற்றி மூப்பனார் தான் முடிவுசெய்ய வேண்டும். இது பற்றி இனி நான் எதுவும் பேச மாட்டேன்.
தேர்தலுக்கு பின்னும், இப்போதும் த.மா.காவுடன் இணைந்து செயல்படவே நாங்கள்விரும்புகிறோம். த.மா.கா தலைமையின் எண்ணம் என்ன என்பது தெரியவில்லை.
த.மா.காவிலிருந்து பிரிந்து தனி கட்சி நடத்துவதை விட சிறுபான்மை மக்கள்பாதுகாப்புக்கு பாடுபடும் காங்கிரசுடன் ஜே.எம். ஹாரூண் போனறவர்கள்சேரவேண்டாம்.
சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு சிதம்பரமும் காங்கிரசில் சேர வேண்டும்.
காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கட்சி உணர்வுடன் வந்தால்அவர்களையும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.