ஒருநாள் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா
தலைமறைவாகி கைதான பொன்முடி:
இதையடுத்து அரசு கிட்டங்கியில் அத்துமீறி நுழைந்ததற்காக, முன்னாள் அமைச்சர் பொன்முடியைக் கைதுசெய்வதற்காக, அவருடைய வீட்டையும் அலுவலகத்தையும் போலீஸார் நள்ளிரவிலேயே சுற்றி வளைத்தனர்.
அரிசியை பார்வையிடுவதற்கு அவரிடம் அரசு ஆணை ஏதாவது உள்ளதா என்று அந்த அரிசி கிட்டங்கியின்ஆய்வாளார் காசிநாதன் கேட்டார். அதற்கு அவர், தான் ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையில் பார்வையிட வந்ததாககூறினார்.
அதன் பின் குத்தூசி மூலம் அரிசி மூட்டையை குத்தி அரிசியை எடுத்து எல்லோரிடமும் காண்பித்தார். இது 15நிமிடம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து, அரிசி கிட்டங்கியின் ஆய்வாளர் காசிநாதன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். பொன்முடியும், சிலரும் அத்துமீறி கிடங்கில் நுழைந்தததாகவும், தன்னைமிரட்டியதாகவும் அவர் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் போலீஸார், பொன்முடி மற்றும் 30 தி.மு.கவினர் மீது 147, 148, 448, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் எம்.எஸ். பன்னீர்செல்வம், விழுப்புரம் நகர செயலாளர் பஞ்சநாதன்ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொன்முடியைக் கைது செய்ய விழுப்புரம் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
ஆனால், விடாமல் பல இடங்களில் சோதனை நடத்திய போலீசார் நள்ளிரவிலேயே பொன்முடியை கைதுசெய்தனர்.