பஸ் மீது குண்டு வீச்சு: விடுதலை சிறுத்தைகள் இயக்க பிரமுகர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் இயக்கப்பிரமுகரைப் போலீஸார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமம் அருகே சென்ற போது அந்த பஸ்சை விடுதலை சிறுத்தைகள்இயக்கத்தைச் சேர்ந்த செல்லப்பா, ஸ்ரீதர், மோகன், ராமமூர்த்தி, திருமுருகன் மற்றும் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதையடுத்து, பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். இதில் பஸ்சின் பின்பகுதியில் தீப்பிடித்தது. தீ பரவுமுன் பயணிகள் தீயைஅணைத்தனர்.
இந்த நிலையில் பஸ் டிரைவர் சங்கர், கண்டக்டர் பாலமுருகன், செக்கர் மணிகண்டன் ஆகிய 3 பேரை வன்முறைக் கும்பல்தாக்கியது.
3 பேரும் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் பாலமுருகன்புவனகிரி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து செல்லப்பாவைப் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்ரீதர், மோகன், திருமுருகன், ராமமூர்த்திஉள்பட மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications