பொதுமக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தனது அறையிலேயே பொதுமக்களிடம் வியாழக்கிழமைமனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற பின் பொதுமக்கள் தினசரி தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டையில்உள்ள முதல்வரின் செயலகத்தில் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள்ஏராளமான அளவில் மனுக்களைக் கொடுத்து வந்தார்கள்.

ஆனால், தாங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் முதல்வரிடம் முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்றுபொதுமக்கள் உணர்ந்தனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் முதல்வரின் செயலகத்தில் கோரிக்கைமனுக்களைக் கொடுக்காமல் போராட்டம் நடத்தினர்.

இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களின் மனுக்கள் சரியாக வரவில்லை என்பதை அறிந்தஜெயலலிதா இதற்கான காரணம் குறித்துக் கேட்டார். அதற்கு முதல்வருக்குக் கொடுக்கப்படும் மனுக்களைமுதல்வரே நேரில் வாங்கினால் மட்டுமே கொடுப்போம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாகமுதல்வரிடம் கூறப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை தனது அலுவலக வளாகத்திலேயே மனுக்களை நேரடியாகப் பெற முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்தார். அதன்படி வியாழக்கிழமை ஜெயலலிதாவே நேரடியாக மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பத்து பத்து பேராக பொதுமக்கள் முதல்வரின் அறைக்கு அனுப்பப்பட்டு ஜெயலலிதாவிடம் மனுக்களைக்கொடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+