தேவாரத்தை காட்டுக்கு அனுப்பியது சரியே: வைகோ

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

வீரப்பனைப் பிடிக்க தேவாரத்தை அனுப்பியது சரியான நடவடிக்கைதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோகூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:

பதவிகளை எதிர்பார்க்காமல் லட்சியப்பிடிப்புடன் செயல்படும் தோழர்கள் மதிமுகவில் மட்டும்தான் உள்ளனர்.

நாம் தனித்து இருப்பது குறித்து சிலர் கிண்டலாகப் பேசி வருகிறார்கள். சிங்கம் தனித்து தான் இருக்கும். ஆனால் அதுதான்காட்டுக்கு ராஜா. அது கம்பீரமாக நிற்கும்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பின் மீது விழும் அடிகள் அதனை கூர் ஈட்டி ஆக்கும். அதேபோல் சோதனைகளை சந்திப்பவனேசாதனைகளைப் படைக்க முடியும்.

1957 ம் ஆண்டு திமுக 124 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 15 தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் 1000, 2,000வாக்குகளே வாங்கியது. எனவே நடந்து முடிந்த தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை.

திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போய்விட்ட நிலையில் மதிமுக மட்டும்தான் எழுச்சியோடு நிற்கிறது.

தமிழக அரசு, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தேவாரத்தை காட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதற்காக தமிழக அரசைப்பாராட்டியே ஆக வேண்டும் என்று பேசினார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+