டியூப் லைட், செங்கல் சாப்பிடும் சித்த மருத்துவர்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே செங்கல், டியூப் லைட்டுகளை சாப்பிட்டு சாகசம் செய்துள்ளார் ஒரு சித்த மருத்துவர்.
தர்மபுரி மாவட்டம், தேவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் சின்னா (26). இவர் தர்மபுரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சித்த மருத்துவம் செய்து வருகிறார்.
சில இடங்களில், இவர் பல அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கவர்வதும் உண்டு. அந்த வகையில், உடைந்த டியூப்லைட்டு, செங்கல், கற்கள் ஆகியவற்றை சாப்பிட்டு அதிசயிக்க வைத்துள்ளார்.
இது குறித்து சின்னா கூறியதாவது:
நான் கடந்த 10 வருடங்களாக சித்த வைத்தியம் செய்து வருகிறேன். ஏழை எளிய மக்களுக்கு இலவச வைத்தியம்செய்வதும் உண்டு.
சித்த மருந்துகளில் சில மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த மருந்தை முதல் நாள் சாப்பிட்டு விட்டு,மறுநாள் என்னால் இரும்புத் தூள், டியூப் லைட் உட்பட பல்வேறு பொருட்களைச் சாப்பிட முடியும்.
இதைப் பொதுமக்களிடையே விளக்க நிகழ்ச்சியாகவும் செய்து காட்டி வருகிறேன் என்றார் சின்னா.