ஜூலை 1ல் யானை காணிக்கை செலுத்துகிறார் ஜெ.
சென்னை:
குருவாயூர் கோவிலுக்கு யானையை காணிக்கையாக செலுத்துவதற்காக ஜூலை 1ம் தேதி முதல்வர் ஜெயலலிதாகுருவாயூர் செல்கிறார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜைகள்,ஹோமங்கள் செய்தார் ஜெயலலிதா. தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானை ஒன்றைகாணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக் கொண்டார் ஜெயலலிதா.
தேர்தலில் வெற்றி பெற்றதும் தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூர் கோவிலுக்கு காணிக்கை செலுத்தவதற்காககண்ணன் என்ற யானையை வாங்கினார் ஜெயலலிதா. இந்த யானை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.ஆனாலும் அந்த யானை இன்னமும் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படவில்லை.
யானையை காணிக்கை செலுத்த இரண்டு முறை ஜெயலலிதா முயன்றார். ஆனாலும் அரசியல் காரணங்களால்அவரால் குருவாயூர் செல்ல முடியலவில்லை.
இந்நிலையில் யானையை காணிக்கை செலுத்த ஜூலை 1ம் தேதி ஜெயலலிதா குருவாயூர் செல்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனி விமானம் மூலம் குருவாயூர் சென்று, குருவாயூரப்பன் கோவிலில் யானையைக்காணிக்கையாகச் செலுத்துவார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications