இன்டர்நெட்டில் இன்று எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல்
சென்னை:
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ,மாணவிகளின் ரேங்க் பட்டியலை வியாழக்கிழமை பகல் 12 மணி முதல் இன்டர்நெட்டில் காணலாம்.
இந்த ரேங்க் பட்டியல் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டு விட்டது.
சிவகாசி மாணவர் ஏ.சி. அருண் முதலிடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அவருடைய கட்ஆப் மார்க் 299.50.
2வது இடம் பெற்றுள்ள கடலூர் மாணவி எஸ். சுதாவின் கட் ஆப் மார்க் 299.32. இவரும் பிற்படுத்தப்பட்டவகுப்பைச் சேர்ந்தவர்தான்.
ரேங்க் பட்டியலில் 3வதாக வந்திருக்கும் சென்னை மாணவி என். திவ்யாவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புதான்.இவருடைய கட் ஆப் மார்க் 298.90.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய 2 படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது.
299.50 முதல் 291.10 வரை கட் ஆப் மார்க் எடுத்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ஜூலை 4ம் தேதி கவுன்சலிங்நடக்கும். கட் ஆப் மார்க் 291.10 முதல் 287.36 வரை எடுத்துள்ளவர்களுக்கு ஜூலை 5ம் தேதியும், 287.34 முதல்275.50 வரை எடுத்துள்ளவர்களுக்கு ஜூலை 6ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், மலை சாதியினருக்குமான கவுன்சலிங்கும் ஜூலை 6ம் தேதிதான் நடைபெறும்.
வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் இந்த முடிவுகளை இன்டர்நெட்டிலும் காணலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககத் தேர்வுக்குழுச் செயலாளர் (பொறுப்பு) கே. ஜெயந்தி கூறியுள்ளார்.
இன்டர்நெட் முகவரிகள்: