ஹைடெக்காக மாறும் சிண்டிகேட் வங்கிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சிண்டிகேட் வங்கி, ஹைடெக் வங்கியாக மாற்றப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்பச் சேவையில் இந்தியாமுழுவதிலும் உள்ள கிளைகளை இணைக்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது.

இது குறித்து சிண்டிகேட் வங்கியின் தலைவர் டி.டி. பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சிண்டிகேட் வங்கி நாடு முழுவதும் 1,733 கிளைகளைக் கொண்டுள்ளது. சுமார் 2 கோடி பேர் வாடிக்கையாளர்களாகஉள்ளனர். கடந்த ஆண்டு ரூ.235 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது இந்த வங்கி.

நாடு முழுவதும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும் 330 கிளைகளை சிண்டிகேட் வங்கி கொண்டுள்ளது. இந்தவங்கி விரைவில் "சென்டிரலைஸ்டு பேங்க்கிங் சொல்யூசன் மூலம் பல கிளைகளை இணைக்க முடிவு செய்துள்ளது.

சிண்டிகேட் வங்கியின்200 கிளைகள் முழுமையான உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட வங்கியாகமாற்றிஅமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. 70 சதவீத கிளைகள் முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன.

வங்கி ஊழியர்களில் 20 சதவீதம் பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். விருப்ப ஓய்வுக்கு காரணம் ஆள்குறைப்பாகஇருந்தாலும் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பெரும்பாலான கிளைகள் கம்ப்யூட்டர்மயமாகி விட்டதால், வேலைப் பளு பெருமளவு குறைந்துள்ளதே இதற்குகாரணம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+