கந்தகோட்டத்தில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
சென்னை:
சென்னையிலுள்ள கந்தகோட்டம் அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் ஜூலை 2ம் தேதி மகா கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம் குறித்து கோவில் அறங்காவலர் பாலசுப்ரமணியம் கூறுகையில், முருகனின் ஏழாவது படை வீடாகக்கருதப்படுவது கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோவில். கடைசியாக இங்கு 1988ம் ஆண்டு கும்பாபிஷேகம்நடந்தது. தற்போது ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
தற்போது ரூ. 1 கோடி செலவில் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம்முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிந்து விடும்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாண்டிச்சேரி ஓங்காரநந்தா சுவாமிகள் மற்றும்அமைச்சர்கள் பி.ராமசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.