ஜூலை 1ல் யானை காணிக்கை செலுத்துகிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

ஜூலை 12ம் தேதி முதல் கண்டலேறு தண்ணீர்:

நாங்கள் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க எல்லா முயற்சிகளும், எடுத்து வருகிறோம். ஈரோட்டிலிருந்து ரயில்மூலமாகவும்,நெய்வேலியிலிருந்து லாரி மூலமாகவம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேட்டூரிலிருந்து தண்ணீர்கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையைச் சுற்றி இருக்கும் பகுதியிலிருந்து நிலத்தடி நீரைச் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகம்செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை மக்கள் குடிநீர் பிரச்சனை குறித்து பயப்பட வேண்டாம்.

கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 190 கனஅடி தண்ணீர் திறந்து விட ஆந்திர முதல்வர் சம்மதித்துள்ளார். அடுத்தமாதம் 12ம் தேதி முதல் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

துரைமுருகன் கருத்துக்கு பதில்:

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் 13 கிலோமீட்டர் கால்வாய் வெட்டப்படாததற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் எனதுரைமுருகன் கருத்து கூறியிருப்பதற்கு நான் பதில் கூறவிரும்பவில்லை.

நீதிமன்ற தடையை நீக்க இவர்கள் என்ன முயற்சி செய்தனர்? கால்வாய் வெட்ட பல தடை வரத்தான் செய்யும்.

கால்வாய் வெட்டும் பணி இன்னமும் முடிவடையவில்லை. அந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனஆந்திர முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இரு மாநில அரசுக்கும் இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. எனவே இது குறித்து மேலும் கருத்துகூறவிரும்பவில்லை என்றார் ஜெயலலிதா.

வரைபடம் மூலம் விளக்கம்:

கிருஷ்ணா நதிநீர்பற்றி வரைபடம் மூலம் விளக்கினார் ஜெயலலிதா. தனது அறையில் இது குறித்த வரைபடத்தைஜெயலலிதா மாட்டி வைத்திருந்தார்.

அதைக் காட்டி நிருபர்களுக்கு அவர் விளக்கம் அளித்தபோது, ஆந்திராவில் செம்மனகுப்பள்ளியிலிருந்து 13கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயே வெட்டப்படவில்லை. இதற்கான திட்டமதிப்பீடும் முடியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+