புலிகள் தாக்குலில் 2 பேர் சாவு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் குறித்துத் தகவல் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் 2 பேரைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
மேலும் பல இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், 5 புலிகளை சுட்டுக்கொன்றனர் என்றுராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புலிகள் மறைவிடங்கள் குறித்து யாரோ சிலர் ராணுவ வீரர்களுக்குத் தகவல்கள் கொடுப்பதாக புலிகளுக்குத்தகவல்கள் கிடைத்ததையடுத்து, தகவல் கொடுத்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
தர்மன் சிவானந்தன் மற்றும் கந்தசாமி தயாரத்னம் ஆகிய 2 பேரும், ஜூன் 26, 27 ம் தேதிகளில் மட்டக்களப்புஅருகே முல்லமுனை மற்றும் கொக்காடிச்சோலை ஆகிய பகுதிகளில் கொல்லப்பட்டனர்.
இன்னொரு சம்பவத்தில் பொன்னாருவா அருகே வேலிக்கண்டா பகுதியில் 6 புலிகளை, ராணுவ வீரர்கள்சுட்டுக்கொன்றனர்.
இதே போல் யாழ்ப்பாணம் மற்றும் வெலோயா பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், 5 புலிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications