சன்டிவி நிருபரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் அரசு தானியக் கிட்டங்கியில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியுடன் சென்றது தொடர்பாகக் கைது செய்யப்பட்டசன் டிவி நிருபர் சுரேஷை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்ட சுரேஷை விடுதலை செய்யக்கோரி சென்னையில் வெள்ளிக்கிழமை பத்திரிக்கை ஆசிரியர்களும்நிருபர்களும் தங்களுடைய வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடத்திய 150 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு சென்னை வேப்பேரி போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்களிடையே கடும் கொந்தளிப்புஏற்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications