சிறையில் கருணாநிதி தொடர்ந்து உண்ணாவிரதம்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடர்ந்து இருந்து வருகிறார்.
அதிகாலையில் இருந்து அவர் எதையும் சாப்பிடவில்லை.
கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துக் கொண்டுசென்றனர்.
சிபிசிஐடி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் என்று பல இடங்களுக்கும்அலைக்கழிக்கப்பட்ட கருணாநிதியை, கடைசியாக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
வீட்டிலேயே முதற்கட்ட விசாரணையை நடத்திய நீதிபதி, வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை கருணாநிதியை ஜெயில் காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் சென்ற அவர் நீர் கூட அருந்தவில்லை. சிறை அதிகாரிகள் தந்த உணவையும்தொடவில்லை.
காலையிலிருந்தே அவருக்கு மருத்துவ வசதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதும் அவரது உண்ணாவிரதத்துக்கு ஒருகாரணமாகும்.
சனிக்கிழமை காலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டதில் இருந்து, அவர் இதுவரை எதுவும் சாப்பிடவில்லை.












Click it and Unblock the Notifications