For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் திங்கள்கிழமை பந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் அவசரமாகக் கூடினர்.

கூட்டத்தில் ஜூலை 2 ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவெடுத்தனர்.

அரசியல் சட்டத்தின் 356 ல் பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவசரமாக டெல்லி செல்கின்றனர்.

அவர்கள், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து, தமிழ்நாட்டில்ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி மனுக் கொடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில், வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமைமாலை நடக்கிறது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X