கருணாநிதி வேலூர் சிறைக்கு மாற்றமில்லை
சென்னை:
கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை வேலூர் சிறைக்குமாற்றாமல் தொடர்ந்து சென்னை சிறையிலேயே வைத்திருப்பது என போலீசார் முடிவுசெய்துள்ளனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள்முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைதுசெய்யப்பட்டார். அவரை அடுத்தமாதம் 7ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படிநீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவர் உடல்நிலையை அவரது குடும்ப மருத்துவரும், அரசு மருத்துவகுழுவும்பரிசோதித்த பின்னரே சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கருணாநிதியை பரிசோதித்த அவரது குடும்ப மருத்துவர் கருணாநிதியின் உடல்நிலைஅவரை சிறையில் அடைக்க அனுமதிக்காது என கூறினார்.
இந்நிலையில் கருணாநிதியை வேலூர் சிறையில் அடைப்பது என போலீசார் முடிவுசெய்தனர். ஆனால் இதை எதிர்த்து கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அவரதுஉடல்நிலைய கருத்தில் கொண்டு அவரை வேலூர் சிறைக்கு மாற்றாமல் தொடர்ந்துசென்னை சிறையிலேயே வைத்திருப்பது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏவும், நடிகர், இயக்குனருமான டி. ராஜேந்தர்கருணாநிதியை சிறையில் சந்தித்துவிட்டு வந்த பின் நிருபர்களிடம் கூறுகையில்,கருணாநிதியின் உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்து அவரைவேலூர் சிறைக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து சென்னைசிறையிலேயேவைத்திருப்பது போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதனால் கருணாநிதி தொடர்ந்து சென்னை சிறையிலேயே இருப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications