For Daily Alerts
Just In
ரயில், பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரயில்போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல ஊர்களில் திமுகவினர் சாலைமறியலிலும், ரயில் மறியலிலும்ஈடுபட்டனர்.
சென்னை கொரட்டூர் அருகே உள்ள ரயில்வே புக்கிங் அலுவலகத்துக்குத் தீ வைக்கப்பட்டது.
சென்னை உள்பட பல நகரங்களில் பஸ், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. வணிக ஸ்தலங்கள் எதுவும்திறக்கப்படவில்லை.
சென்னை நகரில் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு சில பஸ்களிலும் மக்கள் கூட்டம் இல்லை. சாலைகள் மயானம் போல்காட்சியளிக்கின்றன.
Comments
Story first published: Saturday, June 30, 2001, 5:30 [IST]