மாறன் வந்தார்.... பிரச்சனை ஆரம்பித்தது: சிபிசிஐடி டிஐஜி
சென்னை:
கருணாநிதியைக் கைது செய்ய அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, சிறிது நேரம் கழித்து முரசொலி மாறன் வந்த பிறகுதான்பிரச்சனைகளே ஆரம்பித்தன என்று கூறினார் சிபிசிஐடி டிஐஜியான முகமது அலி.
அவரிடம் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன், அவர் எங்களுடன் வர மறுத்தார். அதன் பிறகு, கைது தொடர்பான எல்லாவிவரங்களையும் கூறினோம். முன்னாள் முதல்வராக அவர் இருந்ததால், சட்டப்படி வந்துவிடுங்கள் என்றும் கூறிப் பார்த்தோம்.
அப்போது வந்த கலாநிதி மாறனும் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளும் வந்து எங்களைத் தடுத்தனர். அவர்களிடமும்கைதுக்கான காரணத்தை விளக்கினோம்.
அந்த சமயத்தில்தான், டி.வி. நிருபருடன் முரசொலி மாறன் அங்கே வந்தார். வந்தவுடன் எங்களை இடித்துத் தள்ளினார்.அப்போதுதான், கருணாநிதி நிலைகுலைந்து, அருகிலிருந்த பிளாஸ்டிக் சேரில் சாய்ந்தார். அவர் கீழே விழுந்து விடாமல் இருக்க,நாங்கள் கைத்தாங்கலாகப் பிடித்தோம்.
ஆனால், நாங்கள்தான் கீழே தள்ளிவிட்டதைப் போல டி.வியில் காண்பித்து விட்டனர்.
அதற்கப்புறம், மோதிரம் அணிந்திருந்த கையால் என்னுடைய கண்ணில் மாறன் மாறி மாறிக் குத்தினார். இதனால் என்னுடையகண்களை என்னால் திறக்க முடியவில்லை என்றார் முகமது அலி.












Click it and Unblock the Notifications