கருணாநிதியை மாறன் தான் தள்ளிவிட்டார்: டிஜிபி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதியைக் கைது செய்யும் போது, அவர் முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதையைப் போலீஸார்கொடுத்தனர் என்று தமிழக போலீஸ் டிஜிபி ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது:

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு கருணாநிதி வீட்டுக்குச் சென்றனர் சிபிசிஐடி போலீஸார். அவர்களுக்கு உதவியாகசென்னை மாநகரப் போலீஸாரும் சென்றிருந்தனர். அங்கிருந்த உதவியாளரிடம் அனுமதி பெற்ற பின்னரே, கருணாநிதி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்று, அவரை எழுப்பியுள்ளனர்.

அவரும் எழுந்தவுடன், போலீஸாரிடம் வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். ஆனால் "உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வாரண்ட் எல்லாம் தேவையில்லை" என்று கூறி, கருணாநிதியைக் கைது செய்ய முயன்றனர்.

அதற்குள் அங்கு வந்த முரசொலி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் வந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கருணாநிதியும் அவருடைய குடும்பத்தினரும் அப்படியும் இப்படியுமாக நேரத்தை இழுத்தடித்தனர். ஆனால்,அவரைக் கைது செய்யமட்டும் விடவில்லை.

போலீஸாருடன் வரமாட்டேன் என்று கருணாநிதியும் கூறினார். இதையடுத்து, தன்னுடைய மஞ்சள் துண்டைத் தோளில் இருந்துஎடுத்து அவரே கீழே போட்டுவிட்டு, தள்ளாடி விழ முயன்றார்.

அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவே போலீஸார் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். கருணாநிதியைமாறன்தான் கீழே தள்ளி விட்டார். அப்போதுதான் இவ்வளவு அமளியும் நடந்துவிட்டது.

இந்த அமளிக்கிடையில், சிபிசிஐடி டிஐஜியான முகமது அலியின் கண் அருகே தன்னுடைய விரல் மோதிரத்தால் குத்திக்கிழித்துள்ளார், மாறன். இதனால் அவருடைய கண்ணருகே காயம் ஏற்பட்டுள்ளது.

பெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான், சிபிசிஐடி போலீஸார் கருணாநிதியைக் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பிலிருந்துகருணாநிதிக்கு எத்தகைய மரியாதைக் குறைவும் தரவில்லை என்றார் ரவீந்திரநாத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+