ஆளுங்கட்சியின் கைக்கூலியாகிவிட்டது போலீஸ்: பாஜக

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆளுங்கட்சியின் கைக் கூலியாக போலீஸ்துறை மாறிவிட்டதற்கு கருணாநிதியின் கைது சம்பவமே சாட்சி என கோவை எம்.பி.யும் பாரதியஜனதாக் கட்சியின் துணைத் தலைவருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் நான்கு முறை முதல்வராகப் பணியாற்றியவரும் முதுபெரும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த கருணாநிதியை நள்ளிரவில்அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.

நாட்டை விட்டே ஓடிப் போகத் துணிந்த சர்வதேசக் குற்றவாளியைப் பிடிப்பதைப் போல கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட விதம்கண்டனத்துக்குரியது.

BJP Warns TN Police

குற்றம் சாட்டவும், அதை விசாரணை செய்யவும், உறுதிப்படுத்தவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு. ஆனால், சட்டத்தைக் கையில்எடுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு கண்காணித்துவருகிறது.

இச்செயலுக்கு போலீஸ் துறையும், தமிழக அரசும் மன்னிப்புக் கேட்க வேண்டும். போலீஸ் துறை ஆளுங்கட்சியின் கைக் கூலியாக மாறிவிட்டதற்கு இதுவே சாட்சி என கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+