For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேம்பால ஊழல்: கருணாநிதி உள்பட 14 பேர் மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக மொத்தம் 14 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக தி.மு.க. தலைவரும் முன்னாள்முதல்வருமான கருணாநிதியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

12 மணி நேரத்தில்...

மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் உட்பட 14 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறுவெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் தான் சி.பி.ஐயிடம் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு தந்தார்.

புகாரை பெற்றதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிக விரைந்து செயல்பட்டனர்.

12 மணி நேரத்திற்குள் 10 பக்க முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கருணாநிதி,

ஸ்டாலின் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்கள்:

1. சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின்

2. முன்னாள் முதல்வர் கருணாநிதி

3. முன்னாள் அமைச்சர் பொன்முடி

4. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி

5. சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஜெகதீசன்

6. சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஆர்.எஸ்.ஸ்ரீதர்

7. மேயர் ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கர்

8. எல் அண்டு டி நிறுவன தலைமை இஞ்ஜினியர் ராகவன்

9. சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை இன்ஜினியர் சேதுராமன்

10. சென்னை மாநகராட்சி தலைமை இஞ்ஜினியர் சீனிவாசன்

11. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் நம்பியார்

12. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முத்துசாமி

13. சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கோலப்பன்

14. உள்ளாட்சித் துறை முன்னாள் செயலாளர் மாலதி.

ஸ்டாலின், கருணாநிதி, ராஜா சங்கர், நம்பியார், ஜெகதீசன், ஆர்.எஸ்.ஸ்ரீதர் ஆகிய 6பேரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோ.சி. மணி, தஞ்சாவூரில் உள்ள ஆடுதுறை வீட்டில் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அரசு அரிசி குடோனில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்னமும்சிறையில் தான் இருக்கிறார்,.

முத்துசாமி, நம்பியார், மாலதி, கோலப்பன் ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாவர்.இவர்களில் நம்பியாரும், முத்துசாமியும் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றிஓய்வு பெற்றுவிட்டனர்.

கோலப்பனும், மாலதியும் இன்னமும் பணியில் இருக்கின்றனர். கோலப்பன் சிவில்சப்ளைஸ் கமிஷனராகவும், மாலதி ஊராட்சி நிர்வாக செயலாளராகவும் உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 14 பேர் மீதும் 120பி - குற்றச் சதி 420- மோசடி, 409 - பொதுபணம் கையாடல், 13 (2), 13 (டி) - ஊழல் தடுப்புச் சட்டம், 167 ஆகிய 6 பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X