பாத்திமா பீவி அறிக்கை மீது இன்று பிரதமர் தலைமையில் விவாதம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டது சம்பந்தமாக தமிழக ஆளுநர் அறிக்கை மீதான விவாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்மத்திய அமைச்சரவையின் கேபினட் கூட்டத்தில் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் சிபிசிஐடி போலீஸாரால் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு, கைது செய்யப்பட்ட கருணாநிதி,சனிக்கிழமை காலை சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் பற்றி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இதைக் கண்டபொதுமக்களும் அரசியல் கட்சிகளும் அதிர்ச்சியில் மூழ்கின.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் பற்றி கண்டனஅறிக்கைகள் வெளியிட்டனர்.
மத்திய அரசும் இந்தக் கைதைக் கண்டித்துள்ளது. இதையடுத்து, இது சம்பந்தமாக ஒரு அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள்அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக ஆளுநர் பாத்திமா பீவியைக் கேட்டுக் கொண்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முன்னதாகவே ஆளுநர் அறிக்கை டெல்லிக்குப் பறந்து விட்டது. மத்திய உள்துறைச்செயலாளர் கமல் பாண்டேவுக்கு இந்த அறிக்கை அனுப்பப் பட்டதாகவும், அவரும் அந்த அறிக்கையைப் பெற்று விட்டதாகவும்கூறப்படுகிறது.
இந்நிலையில், கருணாநிதி கைதான விவரம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. அப்போதே,இந்த ஆளுநர் அறிக்கையின் மீதான விவாதமும் நடைபெறும் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கேட்டவுடன், தன்னுடைய அறிக்கையை அனுப்பி விட்டதன் மூலம், தன்னுடைய ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கோ, சிபிசிஐடி போலீஸ்அதிகாரிகளுக்கோ எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பது பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூற இயலாது.
ஆளுநர் அறிக்கையின் எதிரொலி எப்படி இருக்கும் என்பது பற்றி கேபினட் கூட்டம் முடிந்த பிறகுதான் தெரிய வரும். கேபினட் கூட்டத்தில்எப்படி முடிவெடுத்தாலும் சரி, 356ஐப் பிரயோகித்து தமிழக அரசைக் கலைக்க முடியாது என்றே நம்பப்படுகிறது.
யு.என்.ஐ.