குழந்தையுடன் தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
கோவை:
இரண்டு வயது பெண் குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளிக்க முயன்றவரைப் போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும்சனிக்கிழமை கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கோவையில் உணர்ச்சிவசப்பட்ட பல தொண்டர்கள், ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு, பஸ் மீது கல் வீச்சு, தீக்குளிப்பு எனபல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் 37வது வார்டு திமுக செயலாளராக இருந்து வருகிறார். இவர் சனிக்கிழமைகாலையில், திமுக தலைவர் கருணாநிதி செய்யப்பட்ட செய்தியை அறிந்து மனம் வேதனைப் பட்டார்.
தனது இரண்டு வயதுக் குழந்தைக்கு கறுப்பு சிவப்பு உடைகளை அணிவித்தார். பின்னர் அந்தக் குழந்தையை தனது பைக்கில் அமரவைத்தார். அத்துடன் மண்ணெண்ணெயையும் கேனில் எடுத்துக் கொண்டார். தனது பைக்கில் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்முன்பாக வந்தார்.
இந்த இடத்தில் சிக்னலுக்காக பஸ் லாரி மற்றும் வாகனங்கள் காத்திருந்தன. போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்த முருகன், சிக்னலின்மத்தியில் வந்து மண்ணெண்ணெயை மடமடவென தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றினார். தீவைத்துக் கொள்ள தீப்பெட்டியை எடுத்தார்.
இதனைக் கண்ட டிராபிக் போலீஸ் வேகமாகச் சென்று தீப்பெட்டியை தட்டிப் பறித்தார். அதற்குள் மற்ற போலீசாரும் ஓடி வந்துபிடித்து முருகனைக் கைது செய்தனர். குழந்தையையும் தூக்கிச் சென்று காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications