மாமியார் மரணம்: கருணாநிதி பரோலில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதி அவரதுமாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பரோலில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தி.மு.க.தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமைநள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
கருணாநிதி போலீசாரால் அடித்துக் கைது செய்யப்பட்டதைப் பார்த்த அதிர்ச்சிஅடைந்த அவரது இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாளின் தாயார் சிவபாக்கியம்(வயது 80) உடல் நிலை பாதிக்கப்பட்டது.
கருணாநிதி எதற்காக கைது செய்யப்பட்டார். எப்போது விடுதலை செய்யப்படுவார்என தனது மகள் ராஜாத்தியை கேட்டுக் கொண்டே இருந்தார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பின் அவர் எதுவுமே சாப்பிடவில்லை. இந்நிலையில்ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து போனார்.
மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி பரோலில்விடுதலை செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications