சிறையில் திமுகவினர் உணவு கேட்டு போராட்டம்
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட திமுக தொண்டர்களுக்குப் போதிய உணவு அளிக்கப்படாததால், அவர்கள் சிறையில்போராட்டம் நடத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக தொண்டர்களும், முக்கியப் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், கோயமுத்தூரிலும் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில், 3 ஆயிரத்திற்கும் மேலான திமுக தொண்டர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிறை நரம்பிவழிகிறது.
இந்நிலையில், திமுகவினருக்கு இன்று காலை உணவு அளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், 1,500 பேருக்கு மட்டுமேஉணவு இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, திமுகவினர் ஒட்டு மொத்தமாக, சிறையில் கொடுத்த உணவைச் சாப்பிடாமல், உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
முன் எச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டதால், இத்தனை பேருக்கும் படுக்கை வசதி உள்பட எந்தவிதமான அடிப்படைவசதியையும் செய்து கொடுக்க சிறை நிர்வாகத்தால் இயலவில்லை. இதனால், பட்டினியோடு வெறும் தரையில் திமுகவினர் படுத்துதூங்கி வருகின்றனர்.