For Daily Alerts
Just In
ஜாமீனில் வெளியே வர மாட்டேன்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதி, நான் ஜாமீனில் வெளியே வர மாட்டேன். சிறையில் இருந்தவாரே வழக்குகளை சந்திப்பேன் என அறிவித்துவிட்டார்.
இது தொடர்பாக தன்னை சிறையில் சந்தித்த திமுக வழக்கறிஞர்களிடம் பேசிய கருணாநிதி, எனக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டாம். நான் சிறையில் இருந்தவாரே இந்த அரசின் வழக்குகளைச் சந்திப்பேன் எனக் கூறிவிட்டார்.
முன்னதாக கருணாநிதியை ஜாமீனில் வெளியே கொண்டு வர திமுகவும் அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். இதற்காகசெவ்வாய்க்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், திமுக வழக்கறிஞர்களை சிறைக்கு அழைத்த கருணாநிதி தனக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனத்திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
arrest karunanidhi chennai government stalin jail governor fast scam fasting report tamilnadu revenge scandal chief minister ministers bridges flyovers
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]