தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவு
டெல்லி:
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தேசிய மனித உரிமைக்கமிஷன் தமிழக அரசுக்கும், தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கும் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், சன் டி.வி. மூலம் ஒளிபரப்பப்பட்டு, நாட்டையேஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக போலீஸ் கமிஷனரும் கருணாநிதி கைதுசம்பந்தப்பட்ட வேறொரு வீ"டியோ கேசட்டை நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்தப் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, போலீஸார் கருணாநிதியைக் கைது செய்த நேரத்தில் மனித உரிமைகள்மீறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், ஒரு முன்னாள் முதல்வர் என்பதையும் நினைவில் கொள்ளாமல், தமிழக போலீஸாரும்கருணாநிதியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர் என்றும் மனித உரிமை கமிஷன் கருதுகிறது.
மேலும், கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, அவருடைய வீட்டில் உள்ள பெண்கள் நடத்தப்பட்ட விதமும் மனித உரிமையைமீறும் விதமாகத்தான் உள்ளது என்றும் மனித உரிமை கமிஷனுக்கு நினைக்கத் தோன்றுகிறது.
எனவே, இந்த மனித உரிமை மீறல் குறித்து, தமிழக அரசும், தமிழக போலீஸ் டி.ஜி.பியும் உடனடியாக அறிக்கை அனுப்பவேண்டும் என்று தேசிய மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.