ஜாமீன் கோரமாட்டார் கருணாநிதி: தயாளு அம்மாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன்னை விடுவிக்கக்கோரி கருணாநிதி ஒரு போதும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டார் என்று கருணாநிதியின்மனைவி தயாளு அம்மாள் தெரிவித்தார்.

சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வரும், திமுகதலைவருமான கருணாநிதி சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டு, சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் தனது குடும்பத்துடன் சென்று பார்த்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜாமீன் மனுத்தாக்கல் செய்து வெளியே வர வேண்டும் என்று அவர் ஒரு போதும் நினைக்கமாட்டார். அதில்அவருக்கு விருப்பமும் இல்லை. நாங்களும் வற்புறுத்த மாட்டோம்.

போலீஸாரால் அவர் இழுத்துச் செல்லப்பட்டதால், காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் கைதுசெய்யப்பட்ட அன்று அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக வந்த எங்கள் குடும்ப டாக்டர் சிறைக்குள்அனுமதிக்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமை எங்களைப் பார்ப்பதற்கு வீல் சேரில்தான் அவர் அழைத்து வரப்பட்டார் என்றார் தயாளுஅம்மாள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+