தமிழக ஆளுநராக பதவியேற்றார் ரங்கராஜன்
சென்னை:
தமிழக ஆளுநராக செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்குப் பதவி ஏற்றுக் கொண்டார் டாக்டர் சி. ரங்கராஜன்.
ஆந்திர மாநில ஆளுநராக இருந்து வரும் டாக்டர் ரங்கராஜன், தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ராஜ்பவனில் நடந்த ஒரு எளிய நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், டாக்டர்ரங்கராஜனுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், சட்டசபை சபாநாயகர் காளிமுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்மற்றும் உயர் அதிகாரிகள் இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழக ஆளுநராகக் கூடுதல்பொறுப்பேற்றுள்ளார் டாக்டர் ரங்கராஜன்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்த டாக்டர் ரங்கராஜனை சபாநாயகர் காளிமுத்து, அதிமுக அமைச்சர்கள்விமான நிலையத்திற்குச் சென்று, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
ஆந்திர மாநில ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார் டாக்டர் ரங்கராஜன்.
சிறந்த பொருளாதார நிபுணரான இவர், இதற்கு முன்பே 2 முறை தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை வகித்துள்ளார். பாத்திமாபீவி 1997ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தமிழக ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன்பும், பாத்திமா பீவி சமீபத்தில் ஹஜ் யாத்திரைசென்ற போதும், டாக்டர் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
யு.என்.ஐ.