For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு வருகிறது பராக்... பராக்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திங்கள்கிழமை இரவு கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்பட்டது.

ஆந்திர மாநிலத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர் இந்த மாதம் 10 ம் தேதிக்குள் தமிழகஎல்லையைக் கடக்கும்.

இச்செய்தியை தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பஞ்சத்தை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகள்மேற்கொண்டார். ஈரோடு, நெய்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீரைத் திறந்து விடும்படிதொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார் ஜெயலலிதா.

அப்போது, தமிழகத்துக்குக் கிருஷ்ணா நதிநீரைத் திறந்து விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆந்திர அரசுமேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார் சந்திரபாபு நாயுடு.

இதையடுத்து, தற்போது கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X