ஜெயலலிதா பணியாவிட்டால்...
சென்னை:
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது முரட்டுத்தனமாகநடந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு ஜெயலலிதா பணியாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் மத்திய அரசுதாயாராக இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டபோது முரட்டுத்தனமாகநடந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுதமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மத்திய அரசின் உத்தரவுக்கு ஜெயலலிதா பணியாவிட்டால் அடுத்த கட்டநடவடிக்கைக்கும் மத்திய அரசு தயாராகவே உள்ளது.
355 பாயும்?
ஜெயலலலிதா மத்திய அரசின் உத்தரவுக்கு பணியாவிட்டால் தமிழக அரசின் மீதுஅரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படலாம்.
அரசியல் சட்டம் 355வது பிரிவு அமல்படுத்தப்பட்டால் மத்திய. அரசு, மாநில அரசின்செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி ஒரு சிறிய விளக்கம்:
அயல்நாட்டின் ஆக்கிரமிப்போ அல்லது உள்நாட்டிலோ குழப்பம் ஏற்பட்டாால்இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு இணங்க மத்திய அரசு, மாநில அரசை வழிநடத்திச் செலவதற்கு வழி வகை செய்வது இந்த 355வது பிரிவு.
இதன்படி தற்போது தமிழகத்தில் உள்நாட்டு கொந்தளிப்பு இருப்பதாக எண்ணி,355வது பிரிவை அமல்படுத்தலாம்.
இந்த பிரிவு அமல்படுத்தப்பட்டால் மாநில அரசின் அதிகாரங்கள் எல்லாம் மத்தியஅரசுக்கு சென்றுவிடும். மத்திய அரசின் கட்டளைப்படிதான் மாநில அரசு செயல்படவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படும்.
தமிழகத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர் ஆளுனர். இதனால் மாநிலஅரசின் நிர்வாக விஷயங்கள் அனைத்தும் ஆளுனருக்கே சென்றுவிடும்.
இதனால் முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை குழு முழுமையாக செயல்பட முடியாதநிலை உருவாகும். இதே போல்தான் எம்.எல்.ஏக்கள் பதவியும், முதல்வர்,அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி முடக்கி வைக்கப்பட்ட நிலையில் நீடிக்கும்.
மாநிலத்தில் சகஜநிலை திரும்பிவிட்டதாக மத்திய அரசு நினைத்தால் 355வது பிரிவைவாபஸ் பெறலாம். அப்போது மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும்திரும்பவரும்.
சர்க்காரியா கமிஷன் சிபாரிசின்படி, நேரடியாக 355வது பிரிவை அமல்படுத்த சிலசட்ட நுணுக்கங்கள் தடையாக உள்ளன. இதனால் 355வது பிரிவைஅமல்படுத்தப்படும் முன், மாநில அரசை தனது உத்தரவுக்கு கட்டுப்படுமாறு மத்தியஅரசு சாதாரணமாக எச்சரிக்க வேண்டும்.
அதற்கு மாநில அரசு கட்டுப்படாவிட்டால் மட்டுமே 355வது பிரிவு அமல்படுத்தப்படவேண்டும். 355வது பிரிவு அமல்படுத்தப்பட்டும், ஆளுனரின் நிர்வாகத்தின் கீழும்நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், அரசியல் சட்டம் 356வது பிரிவைபயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.