திமுக அதிருப்தி
சென்னை:
ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைப்பதில்லை என மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பதால் திமுக பெரும்அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
356வது பிரிவை திமுக கடுமையாக எதிர்த்து வந்தாலும் கூட இப்போது இந்தப் பிரிவைப் பயன்படுத்தி அதிமுகஆட்சியைக் கலைத்தே ஆக வேண்டும் என திமுக கோரியது.
இது தொடர்பாக சட்டசபை திமுக தலைவரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான அன்பழகன் பிரதமருக்குக்கடிதம் எழுதியிருந்தார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.ஆர். பாலு விடுதலையான பிறகு கூறுகையில், அரசியல் சட்டத்தின்356வது பிரிவை நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம்.
ஆனால், இப்போது தமிழகத்தில் உள்ள நிலையை இந்தப் பிரிவை பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையைஉருவாக்கியுள்ளது என்றார்.
இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் திமுகதொண்டர்கள் மட்டத்தில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது.