ஆட்சி கலைந்துவிடும் அச்சத்தில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக அரசைக் கலைத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.

இந்தப் பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கே.கே. நகரை சேர்ந்த மணி-புஷ்பா தம்பதியரின் மகன் பாண்டியன். இவர்அதிமுக பிரமுகர்.

திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டசம்பவம் குறித்து முறையான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என்ற காரணத்தால் கவர்னர்பாத்திமா பீவியை பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது.

மேலும் கருணாநிதியை கைது செய்து முறை சரியல்ல என்றும், அதிமுக அரசைக் கலைக்கக் கோரியும் திமுகவினர்மத்திய அரசிடம் வற்புறுத்தி வந்தனர்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பாண்டியன் மனவருத்தம் அடைந்தார். முதலில் கவர்னரை நீக்கினார்கள். அதேபோல் அதிமுக அரசையும் நீக்கி விடுவார்களோ என்று பயந்த பாண்டியன் தற்கொலை செய்து கொள்வது எனமுடிவெடுத்தார்.

இதையடுத்து, வீட்டில் தன்னுடைய அறைக்குச் சென்ற அவர், தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து அந்த வீடும் தீப்பிடித்து எரிந்தது.

வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புப் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து, கடும்போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.

அப்போது பாண்டியன் அந்த அறைக்குள் கருகிய நிலையில் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+