கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு: தயாளு அம்மாள் வேதனை
சென்னை:
கருணாநிதிக்கு நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறைகூட கொடுக்க அனுமதிக்கவில்லை என கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வருத்தத்துடன் கூறினார்.
மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தி.மு.க.தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி, பேத்திஎழிலரசி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சென்று பார்த்தனர்.
அதன் பின் வெளியே. வந்த தயாளு அம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், சக்கர நாற்காலியில் உட்கார வைத்துஅவரை அழைத்து வந்தனர். அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
அவருக்கு சிறையில் கொடுக்கும் உணவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் சோர்வாக இருக்கிறார்.நாங்கள் அவருக்கு கொடுப்பதற்காக வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்றிருந்தோம்.
ஆனால் அதை அவருக்கு கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பழச்சாறு கொடுக்கவும் சிறைஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எங்கள் குடும்ப டாக்டரை அனுப்பி அவரை பரிசோதனை செய்ய முன்னர் சிறை அதிகாரிகள் அனுமதிப்பதாககூறினர். ஆனால் அவர்கள் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அவர் எங்களிடம் மிகவும் சோர்வாக இருக்கிறது. தோள்பட்டை அதிகமாக வலிக்கிறது என்றார்.
நாங்கள் அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்யட்டுமா என்று கேட்டோம். அவர் அதற்கு மறுப்புதெரிவித்துவிட்டார். நாங்களும் அவரை மேலும் வற்புறுத்தவில்லை.
தமிழக சிறைகளில் இருக்கும் தொண்டர்கள் விடுதலை செய்யப்பட்டதை அவரிடம் தெரிவித்தேன் என்றார்தயாளு அம்மாள்.












Click it and Unblock the Notifications