கருணாநிதி, ஜெயலலிதா 2 பேருக்கும் ஒரே "எதிரி"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய 2 பேருக்குமே ஊழல் வழக்குகளின்விசாரணை அதிகாரியாக இருப்பவர் சிபிசிஐடி அதிகாரியான என். பத்மநாபன்.

அதிமுகவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக தற்போதுஉள்ளார் பத்மநாபன். டான்சி வழக்கின் விசாரணை அதிகாரியும் இவர்தான்.

தற்போது, ரூ.12 கோடி ஊழல் செய்ததாக, கருணாநிதி, சென்னை மேயர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள்கோ.சி. மணி, பொன்முடி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கருணாநிதி மட்டும் புதன்கிழமைமாலை விடுதலை செய்யப்பட்டார். இந்த ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் பத்மநாபன் ஏற்றுள்ளார்.

இதனால், நிலக்கரி ஊழல் மற்றும் டான்சி ஊழல் வழக்குகள் சம்பந்தமாக தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்குஎதிராகவும், சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக கருணாநிதிக்கு எதிராகவும்ஒரே நேரத்தில் ஆஜராக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார் பத்மநாபன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+