வழியனுப்பி வைக்கப்பட்டார் பாத்திமா பீவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு வியாழக்கிழமை தமிழக அரசின் சார்பில் வழியனுப்பு விழாநடைபெற்றது.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து தற்காலிகஆளுநராக ஆந்திர மாநில ஆளுநர் ரங்கராஜன் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
பதவி விலகிச் செல்லும் பாத்திமா பீவிக்கு தமிழக அரசின் சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது.வியாழக்கிழமை காலை விமான நிலையத்தில் அவர் அரசின் சார்பில் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழகப் போலீஸ் டி.ஜி.பி. ஏ. ரவீந்திரநாத்தும் விமான நிலையம் சென்று பாத்திமா பீவியை வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications