ஆஸ்திரேலியா: ஹிப்னாடிச கொள்ளையடித்த இந்தியர்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கடைகளில் ஹிப்னாடிசம் செய்து பணத்தை கொள்ளையடித்ததாக சென்ற மாதம்கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு இந்தியர்.
ஆனால் அவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
அவரைப் பற்றி போலீஸாருக்குத் தெரிந்ததெல்லாம், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், 26 வயதாகும்அவர் டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வந்தவர் என்பதும்தான்.
இந்த இந்தியர் பல கடைகளுக்கும் சென்று கடை முதலாளிகளிடமும், பணிபுரிவோரிடமும் பேசி அவர்களைஹிப்னானிடிசம் செய்து அவர்களிடம் உள்ள பணத்தைத் தன்னிடம் கொடுக்க வைப்பார். அதன் பின் பணத்துடன்தலைமறைவாகி விடுவார்.
இவரது ஹிப்னாடிசத்தில் மயங்கி பணத்தை பறி கொடுத்த கவுசர் ஜமால் என்ற பெண், "இவர் என்னிடம் எனதுஎதிர்காலம் பற்றி ஜோசியம் சொல்வதாகக் கூறினார். பின்னர் என்னை மயக்கி என்னிடமிருந்த 100 ஆஸ்திரேலியடாலர்களை வாங்கிக் கொண்டார். அவர் என்னை மயக்கிய காரணத்தால்தான் அவர் கேட்டவுடன் நான் பணத்தைகொடுத்துவிட்டேன்" என்றார்.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. நீண்ட நாள் தேடுதலுக்கு பின் அவரை போலீஸார் அவரைக்கண்டுபிடித்து, கைது செய்தனர். ஆனாலும் அவர் மீது எந்த விதமான வழக்கு தொடுப்பது என போலீசார்குழப்பத்தில் உள்ளனர்.
இவர் ஹிப்னாடிசம் மூலம் பணத்தை கொள்ளையடித்துள்ளதால், இவர் சட்டத்தில் எந்த பிரிவை மீறி குற்றம்செய்திருக்கிறார், எந்த பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு தொடர்வது என தெரியாமல் போலீசார் திணறிப்போயுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications